இந்தியாவுடனான டி 20 சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு!

Date:

இந்தியாவுடனான மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதிக்காக இந்த பட்டியலை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி லக்னோவில் நடைபெறவுள்ளது.

சுற்றுப்பயணத்தின் போது மற்றும் வனிந்து ஹஸரங்க மற்றும் பினுர பெர்னாண்டோர் ஆகிய வீரர்களுக்கு கொவிட் உறுதிப்படுத்தப்பட்டது. இந் நிலையில் தற்போது குணமடைந்துள்ள அவர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது உபாதைக்குள்ளான அவிஸ்க பெர்ணான்டோ, நுவன் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...