உக்ரைன் அதிபர் மற்றும் அமெரிக்க துணை அதிபரிடையே விசேட சந்திப்பு!

Date:

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் மாபெரும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிபர் விளாடிமிர் செலோன்ஸ்கியை அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜெர்மனியின் மியூனிச் நகரில் சந்தித்து பேசியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரமும் படையெடுப்பு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெர்மனிக்கு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் இந்த இக்கட்டான சமயத்தில் மக்களுடன் இருக்க அதிபருக்கு ஜோ பைடன் நிர்வாகம் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியதாக அமெரிக்காவின் சி.என்.என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் விதிக்கும் என அமெரிக்க துணை அதிபர் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...