மேற்கிந்திய தீவுகள் அணியை வெள்ளையடிப்பு செய்து கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

Date:

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 17 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
.

185 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்திய அணியின் பந்து வீச்சில் ஹெர்ஷல் பட்டேல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வய்ட்வொஷ் முறையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...