மேற்கிந்திய தீவுகள் அணியை வெள்ளையடிப்பு செய்து கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

Date:

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 17 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
.

185 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்திய அணியின் பந்து வீச்சில் ஹெர்ஷல் பட்டேல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வய்ட்வொஷ் முறையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...