விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ 10 நாட்களுக்கு விளையாட்டிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் இலங்கை அணிக்கு எதிரான போட்டி தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தொடரில் விராட் டி 20 தொடரில் களமிறங்காமல் டெஸ்ட் போட்டி தொடரில் மட்டும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு அளிக்கப்பட்டதையடுத்து கடந்த 2 வது டி20 போட்டியில் அரை சதம் விளாசி அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்த இருவருமே இன்றைய கடைசி டி20 போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. அவர்கள் இன்று சொந்த ஊர் திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.