ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் விட்டின் மீது இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல்

Date:

இன்று அதிகாலை 2.10 அளவில் பிலியந்தலை கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்கு பிரவேசித்த நான்கு பேர் கொண்ட குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்தார்.

வெள்ளை சிற்றூர்ந்தொன்றில் வந்த குழுவினர், குடியிருப்பின் பிரதான நுழைவாயிலை பலவந்தமாக திறந்து, அங்கிருந்தா பாதுகாப்பு உத்தியோகத்தரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நேரில் கண்ட சாட்சியத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதாக சமுதித்த சமரவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல தடவைகள் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் உடனடியாக அறிவிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் காவல்துறையினர் வந்து வீட்டுத் திட்டத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த தாக்குதல் தொடர்பான சீ.சி.ரீ.வி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு வழக்கு: அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாட்டின் சில பிரதேசங்களில் மழைக்கான வாய்ப்பு

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப்...

மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு...