டெங்கு வைரஸில் மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Date:

டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய தற்போது நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும் காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்காரணமாக 24 மணித்தியாலங்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியரின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், காய்ச்சலுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி பாரசிட்டமோல் மாத்திரையை தவிர வேறு எந்த மருந்தையும் உட்கொள்ளக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,50 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 48 வீதமானனோர் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர்.

மேல் மாகாணத்தில் களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாகாணங்களிலுள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணம், புத்தளம், காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மற்றும் மட்டகளப்பு ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனைவரும் டெங்கு நுளம்பு பரவ இடமளிக்காத வகையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...