மேற்கிந்திய தீவுகள் அணியை வெள்ளையடிப்பு செய்து கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

Date:

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 17 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
.

185 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இந்திய அணியின் பந்து வீச்சில் ஹெர்ஷல் பட்டேல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வய்ட்வொஷ் முறையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...