இரத்மலானை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது: இன்று முதல் இந்திய விமான சேவை!

Date:

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 55 வருடங்களுக்கு பின்னர் இன்று (27) முதல் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று காலை 08:47க்கு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகைத் தரும் விமான நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் 60 டொலர் பயண வரி, 30 டொலர் மாத்திரமே அறவிடப்படவுள்ளது. இதேவேளை, கடந்த 2 வருடங்கள் இயங்காதிருந்த இந்தியாவிற்கான சர்வதேச விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.

இலங்கை உள்ளிட்ட 40 நாடுகளுக்கு சொந்தமான 60 விமான சேவை நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவிக்கின்றது.

கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிற்கான சர்வதேச விமான சேவைகள் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...