எதிர்வரும் வாரம் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு நீட்டிப்பு!

Date:

எதிர்வரும் வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனி திஸ்ஸ அனல்மின் நிலையத்தின் பணிகள் நேற்று முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மற்றைய மின்நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு இலங்கை மின்சார சபை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, அரச ஊழியர்கள் இன்றும் நாளையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை முன்மொழிந்துள்ளது.

மின்வெட்டு காலத்தை குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரம் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நம்புகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...