ஜனாதிபதியின் இல்லத்தை சுற்றிவளைத்த மக்கள் – மிரிஹானவில் பரபரப்பு!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்த மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள பென்கிரிவத்தை வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதல் தடவை அப்பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அங்கு சற்றுமுன்னர், சிறப்பு அதிரடிப்படையினர் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் சற்றுமுன்னர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அப்பிரதேசம் முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...