ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 2ஆம் இடம்!

Date:

ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டி நேற்றையதினம் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, போட்டித் தொடரின் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் அஹமட் நிபால் பெற்றுக்கொண்டார்.

இலங்கை பாடசாலை மட்ட கால்பந்தாட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியை கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உட்பட கல்லூரியின் ஆசிரியர்களும் பாராட்டுவதில் பெருமிதம் கொள்கின்றது.

அதேநேரம், அஹமட் நிபால் தனதாக்கிக் கொண்ட இரண்டாவது சிறந்த கோல் காப்பாளருக்கான விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...