ஜனாதிபதி தலைமையிலான சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்தது எதிர்க்கட்சி!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ள சர்வக் கட்சி மாநாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

அதேபோன்று அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துக் கொள்ளாதிருக்க தீர்மானத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளான உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உறுமய, வீமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் வாசுதேவ நாணயக்காரவின் நவ சமசமாஜக்கட்சி ஆகியனவும் பங்குபற்றாது என என அறிவித்துள்ளன.

எனினும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளது.

இதேவேளை ‘இது ஒரு ஊடக வித்தையாக மட்டுமே உள்ளது, இது எந்த பலனையும் தராது,’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

‘இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது மற்றும் சர்வ கட்சிமாநாடு மூலம் பயனுள்ள எதையும் கொண்டு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை,’ என்று அவர் மேலும் கூறினார்.

கட்சியை புறக்கணிக்கும் தீர்மானம் குறித்து எஸ்.ஜே.பி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நாளை நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என அத்தநாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...