தண்ணீர் போத்தல்கள் மற்றும் முகக்கவசங்களின் விலை அதிகரித்தது!

Date:

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 1.5 லிட்டர் குடிநீர் போத்தல் 90 ரூபாவிலிருந்து 120 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேநேரம், முகக் கவசங்களின் விலையும் இன்று முதல் 30வீதமாக அதிகரிக்க உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் அனைத்து வகைகளிலும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.

இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...