‘பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது’:பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Date:

பொலிஸ் சேவை வாகனங்களுக்கு போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நெருக்கடியின் போது பொலிஸ், படைகள் மற்றும் தீயணைப்புத் துறைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, ‘அனைத்து சேவை வாகனங்களும் அந்த பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் அல்லது டீசலை நிரப்பிக்கொள்கின்றன.

அந்த நிலையங்களில் சேவை வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை ஒதுக்குவதற்கு காவல்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

எனவே, எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வரிசையில் பொலிஸ் சேவை வாகனத்தை நீங்கள் ஒரு போதும் பார்த்திருக்க மாட்டீர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொலிஸ், தீயணைப்புப் படைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தாமதமாக வருவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்ட போதிலும், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...