அமைச்சில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மௌனமாகவுள்ளார்: இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகினார்!

Date:

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.

அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சில கவலைகளை முன்வைத்து கடிதம் எழுதியிருந்தார்.

தமது அமைச்சில் உள்ள சில விடயங்கள் தொடர்பிலேயே இந்த கவலைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நாடு மிகவும் பாரதூரமான விடயங்களை எதிர்நோக்கி வருவதனால் தான் தனது அமைச்சில் உள்ள பிரச்சினைகள் குறித்து மௌனம் காத்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் மீது குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவில் அல் ஜசீரா செய்தியாளர் முகமது விஷாஹ் கொ*லப்பட்டார்: பத்திரிகையாளர்கள் பலி எண்ணிக்கை 262 ஆக உயர்வு.

அல் ஜசீரா முபாஷர் (Al Jazeera Mubasher) தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது...

லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவோம்: ஈரான் எச்சரிக்கை.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட  பிறகு,நேற்று...

சில பகுதிகளில் பிற்பகலில் மழை: நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலை

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா...

கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்...