அமைச்சில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மௌனமாகவுள்ளார்: இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகினார்!

Date:

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.

அவர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சில கவலைகளை முன்வைத்து கடிதம் எழுதியிருந்தார்.

தமது அமைச்சில் உள்ள சில விடயங்கள் தொடர்பிலேயே இந்த கவலைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நாடு மிகவும் பாரதூரமான விடயங்களை எதிர்நோக்கி வருவதனால் தான் தனது அமைச்சில் உள்ள பிரச்சினைகள் குறித்து மௌனம் காத்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் மீது குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...