எதிர்வரும் வாரம் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு நீட்டிப்பு!

Date:

எதிர்வரும் வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனி திஸ்ஸ அனல்மின் நிலையத்தின் பணிகள் நேற்று முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மற்றைய மின்நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு இலங்கை மின்சார சபை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, அரச ஊழியர்கள் இன்றும் நாளையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை முன்மொழிந்துள்ளது.

மின்வெட்டு காலத்தை குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரம் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நம்புகிறது.

Popular

More like this
Related

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...