எரிபொருள் நிலையத்தில் வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது: வரிசையில் நின்று உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

(File Photo)
நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாக்குவாத சண்டையில், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரால் 29 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு முன்னதாகவே எரிபொருளை பெற்றுக்கொண்ட சந்தேக நபர் பின்னர் எரிபொருளை பெற்றுக்கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் போது கூரிய பொருளால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற 37 வயதான முச்சக்கர வண்டி சாரதியை தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்றும் (21 ) ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

மீரிகமவில் உள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளை நிரப்பிவிட்டு தனது முச்சக்கர வண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சனிக்கிழமை, கண்டி வத்தேகம- உடதலவின்னவில் 71 வயதான ஒருவர் அதிக உஷ்ணம் காரணமாக மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவர்களில் 70 வயதான ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...