சர்வகட்சி மாநாட்டை பல அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக பல அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டிற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய ஆகியன நிராகரித்துள்ளன.

இந்நிலையில் சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துகொள்ளாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் 11 இல் இருந்து இரு கட்சிகள் மட்டுமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.

இதேவேளை சர்வகட்சி மாநாட்டுக்கு சென்று இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

குவைத்தின் தேசிய விமான நிறுவனமான குவைத் ஏர்வேஸ், எதிர்வரும் ஏப்ரல் 15...

புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி...

அரபு நாடுகளின் தூதுவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: மத்திய கிழக்கில் அமைதி நிலவ இலங்கை ஆதரவு!

இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின்  உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார...