சீனாவில், மலையில் விழுந்து நொறுங்கிய விமானம் :பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Date:

சீனாவில் 133 பேருடன் சென்ற ‘சீனா ஈஸ்டர்ன்’ என்ற எயார்லைன்ஸிற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன.

குன்மிங் நகரிலிருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்தபோது குவாங்சி மாகாணத்தில் உள்ள மலையில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது என சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில் மீட்புக் குழுக்கள் அனுப்பட்டுள்ள போதும் உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

குறித்த விமானம், புறப்பட்டு சென்றபின் உரிய நேரத்துக்குள் குவாங்ஜு நகருக்கு விமானம் சென்று சேரவில்லை.இதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் மலைப்பகுதியில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது

இந்த விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.

விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலைமை தொடர்பில் என்ன ஆனது? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

அதேநேரம், குவாங்சி பகுதியில் விமானம் மோதியதால் அங்குள்ள மலைப் பகுதியில் பாரியளவில் தீ ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...