ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்த மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள பென்கிரிவத்தை வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதல் தடவை அப்பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அங்கு சற்றுமுன்னர், சிறப்பு அதிரடிப்படையினர் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் சற்றுமுன்னர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அப்பிரதேசம் முழுவதும் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகின்றது.