ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 2ஆம் இடம்!

Date:

ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டி நேற்றையதினம் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, போட்டித் தொடரின் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் அஹமட் நிபால் பெற்றுக்கொண்டார்.

இலங்கை பாடசாலை மட்ட கால்பந்தாட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியை கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உட்பட கல்லூரியின் ஆசிரியர்களும் பாராட்டுவதில் பெருமிதம் கொள்கின்றது.

அதேநேரம், அஹமட் நிபால் தனதாக்கிக் கொண்ட இரண்டாவது சிறந்த கோல் காப்பாளருக்கான விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...