புத்தசாசன அமைச்சினால் புத்தளத்தில், போதைப்பொருள் புனர்வாழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கு!

Date:

புத்தசாசன அமைச்சின் கீழ் புத்தளம் பெந்தகோஸ்து தேவாலயத்தில் போதைப்பொருள் புனர்வாழ்வு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இடம்பெற்றது.

இக்கருத்தரங்கு திங்களன்று புத்தசாசன அமைச்சினால் போதைப்பொருள் புனர்வாழ்வு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் நடைபெற்றது.

இதன்போது குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்களும் சகல மதங்களையும் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் ஒழிப்பில் சமய நிறுவனங்கின் பங்களிப்பு மிக முக்கியமாக இருப்பதால் சமயத் தலைவர்களுக்கு இது தொடர்பான விரிவான விளக்கமும் போதை ஒழிப்பு சம்பந்தமான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

சமயத் தலைவர்களான, புத்தியாகம ரதன ஹிமி, அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப், சிவஸ்ரீ வெங்கடராம குருக்கள், ஆகியோர் இந்த நிகழ்வில் கருத்துரைகளை வழங்கினார்கள்
இதேவேளை கருத்தரங்கு நிகழ்வில் வரவேற்புரையை பெந்தகோஸ்து தேவாலய பிரதான மதகுரு ரத்ன மலர் சகோதரி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...