புத்தசாசன அமைச்சினால் புத்தளத்தில், போதைப்பொருள் புனர்வாழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கு!

Date:

புத்தசாசன அமைச்சின் கீழ் புத்தளம் பெந்தகோஸ்து தேவாலயத்தில் போதைப்பொருள் புனர்வாழ்வு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இடம்பெற்றது.

இக்கருத்தரங்கு திங்களன்று புத்தசாசன அமைச்சினால் போதைப்பொருள் புனர்வாழ்வு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் நடைபெற்றது.

இதன்போது குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்களும் சகல மதங்களையும் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் ஒழிப்பில் சமய நிறுவனங்கின் பங்களிப்பு மிக முக்கியமாக இருப்பதால் சமயத் தலைவர்களுக்கு இது தொடர்பான விரிவான விளக்கமும் போதை ஒழிப்பு சம்பந்தமான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

சமயத் தலைவர்களான, புத்தியாகம ரதன ஹிமி, அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப், சிவஸ்ரீ வெங்கடராம குருக்கள், ஆகியோர் இந்த நிகழ்வில் கருத்துரைகளை வழங்கினார்கள்
இதேவேளை கருத்தரங்கு நிகழ்வில் வரவேற்புரையை பெந்தகோஸ்து தேவாலய பிரதான மதகுரு ரத்ன மலர் சகோதரி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...