புத்தாண்டு தினத்திற்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: எரிசக்தி அமைச்சர் உறுதி

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏப்ரல் புத்தாண்டு தினம் நிறைவடைவதற்குள் தீர்க்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மீண்டும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

நிகர்வொன்றில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை முடிவுக்கு வந்தவுடன், அரசாங்கம் மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குதி செய்யத் நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, 215,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளில் அமைச்சிடம் இருப்பதாகக் கூறிய அவர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட இது போதுமானது என்றார்.

இதேவேளை, இந்த வாரத்தில் மேலும் இரண்டு டீசல் ஏற்றுமதிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சர் உறுதியளித்த போதிலும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

Popular

More like this
Related

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...