‘பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது’:பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Date:

பொலிஸ் சேவை வாகனங்களுக்கு போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதால், தற்போதைய நெருக்கடியின் போது பொலிஸ், படைகள் மற்றும் தீயணைப்புத் துறைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, ‘அனைத்து சேவை வாகனங்களும் அந்த பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் அல்லது டீசலை நிரப்பிக்கொள்கின்றன.

அந்த நிலையங்களில் சேவை வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை ஒதுக்குவதற்கு காவல்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

எனவே, எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வரிசையில் பொலிஸ் சேவை வாகனத்தை நீங்கள் ஒரு போதும் பார்த்திருக்க மாட்டீர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொலிஸ், தீயணைப்புப் படைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தாமதமாக வருவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்ட போதிலும், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...