எரிபொருள் பற்றாக்குறையால் 8 மின் உற்பத்தி நிலையங்கள் இடைநிறுத்தம்!

Date:

நாட்டுக்கு மின்சாரம் வழங்கும் பத்து (10) மின் உற்பத்தி நிலையங்களில் எட்டு உற்பத்தி நிலையங்களை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்புக்கு சுமார் 424 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் சோஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையத்தின் A மற்றும் B பிரிவுகள் மாத்திரமே செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்றைய தினம் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாகவும் இன்று மின்சாரம் தயாரிக்க போதுமானது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...

குழந்தைகளுக்கென அறிமுகமாகும் போசனைத் திட்டம்

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை...

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...