‘தாள் தட்டுப்பாடுகளால் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை’:கல்வி அமைச்சர்

Date:

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தாள் தட்டுப்பாடு ஏற்படாது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.

ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ‘தாள் தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வந்தன, இருப்பினும், அது தீர்க்கப்பட்டுள்ளதுடன் க.பொ.சாதாரண தரப்பரீட்சையை மே மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

ஏதேனும் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் கூடுதல் காகித கையிருப்புகளை வாங்க கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

மாநில பல்கலைக்கழக சேர்க்கை குறித்து பேசிய அமைச்சர், இந்த ஆண்டு மேலும் 10,000 இளங்கலை பட்டதாரிகளை சேர்க்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றார்.

‘இந்த ஆண்டு இறுதிக்குள் உயர்தரப் பரீட்சையை நடத்துவதே எங்களின் நோக்கம். பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...