புத்தாண்டு தினத்திற்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: எரிசக்தி அமைச்சர் உறுதி

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏப்ரல் புத்தாண்டு தினம் நிறைவடைவதற்குள் தீர்க்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மீண்டும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

நிகர்வொன்றில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை முடிவுக்கு வந்தவுடன், அரசாங்கம் மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குதி செய்யத் நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, 215,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளில் அமைச்சிடம் இருப்பதாகக் கூறிய அவர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட இது போதுமானது என்றார்.

இதேவேளை, இந்த வாரத்தில் மேலும் இரண்டு டீசல் ஏற்றுமதிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சர் உறுதியளித்த போதிலும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...