மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்கு, உலக வங்கி உதவி!

Date:

இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

உற்பத்தி, வழங்கல் மற்றும் மருந்து ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய மனித அபிவிருத்திக்கான பிராந்திய பணிப்பாளர் லின் டி. ஷெர்பர்ன்-பென்ஸ்,(Lynne D. Sherburne-Benz) உடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இலங்கையில் தொடர்ச்சியான மருத்துவ மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்த உலக வங்கியின் உதவியை இராஜாங்க அமைச்சர் கோரியுள்ளார்.

இதனை கருத்திற்கொண்ட உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர் இராஜாங்க அமைச்சருக்கு உலக வங்கி அதிக முன்னுரிமை அளித்து உடனடியாக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமென அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கையில் கொவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த Pகணைநச தடுப்பூசிகளைப் பாதுகாப்பதற்காக வழங்கப்பட்ட நிதி உதவிக்கு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜெயசுமண உலக வங்கிக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...