அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வார்: நிதி அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றுவார்!

Date:

கடந்த திங்கட்கிழமை (5) நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, நிதியமைச்சர் என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

நிதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை (6) இராஜினாமா செய்த போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே அலி சப்ரி நிதி அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றுவார். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கைக்கான உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பான உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புகளில் கலந்துகொள்வதற்காக இந்த வாரம் பயணிக்கவிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பு திங்கட்கிழமை (11) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அலி சப்ரி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...