அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்ய 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது உலக வங்கி!

Date:

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உலக வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அவசரகால மருந்துகள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் உலக வங்கி மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை இந்திய கடன் உதவியை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உலக வங்கியிடம் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், கடன்களை மறுசீரமைப்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து உத்திகளும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...