ஆறு மாகாணங்களுக்கு அதிகமான வெப்ப காலநிலை நிலவும்!

Date:

நாட்டின் மேற்கு, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், வடகிழக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பகல் வேளையில் அதிக வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்நாட்களில் மேற்படி பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளமையினால் மக்கள் அவதியுறுவதாகவும் அதிகளவு நீர் மற்றும் திரவ பானங்களை பருகுவதன் மூலம் நீர்ச்சத்து குறைவதை தடுக்க முடியும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை ஏப்ரல் 03ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை மாலை வேளையில் மேல், தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், ஏப்ரல் 15ஆம் திகதிக்கு பின்னர் மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...