இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து சுயேட்சை எம்.பி.க்கள் இந்திய தூதுவருடன் கலந்துரையாடல்!

Date:

அண்மையில் அரசாங்கத்தைவிட்டு வெளியேறிய தயாசிறி ஜயசேகர, உதய கம்மன்பில, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளது.

இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது நாட்டின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை மக்களுடன் இணைந்து நிற்பதற்காக இந்திய மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியத் தூதுவர் மற்றும் சுயேட்சை எம்.பி.க்கள் இலங்கையின்; தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை குறித்து தங்கள் எதிர்கால முன்னோக்கைப் பகிர்ந்து கொண்டனர்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...