கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்களில் பெற்றோல், டீசல் பதுக்கி வைத்திருப்பு: பொலிஸாரினால் திடீர் சோதனை!

Date:

கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் எரிபொருட்களை வீடுகள் மற்றும் கடைகளில் பதுக்கி வைத்திருப்போரை கண்டறிவதற்காக திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வழமை போன்று எமக்குத் தேவையான எரிபொருள் தங்களுக்கு கிடைப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக மக்களின் நீண்ட வரிசை காணப்படுகின்றது.

இதற்குக் காரணம் சிலர் எரிபொருளை தேவைக்கு அதிகமாக கொள்வனவு செய்து பதுக்கி வைத்திருப்பதாகவும் சிலர் அதிக விலைக்கு விற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைக் கண்டறிவதற்காக பொலிஸாரினால் திடீர் சோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எரிபொருள் பதுக்கி வைத்திருப்போர் சம்மந்தமாக பொதுமக்கள் தகவல் தருமாறு பொலிஸாரால் கேட்கப்பட்டுள்ளது.

இச்சோதனையின்போது கைப்பற்றப்படும் எரிபொருள் அரச உடமையாக்கப்படுவதுடன் உரிய நபர்களுக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபையூடாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் பொலிஸ் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...