காலி முகத்திடலில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞன் உயிரிழப்பு!

Date:

அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

50 வயதாக ரெப் இசை கலைஞரான ஷிராஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில் நேற்றிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாரடைப்பு  மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .

உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடத்தப்படவுள்ளது. இதேவேளை இலங்கை கலைஞர்கள் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...