‘கோட்டாகோகம’ :காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதிக்கு புதிய பெயர்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தோல்வியடைந்த பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரங்கள் மற்றும் அணிவகுப்புகளை அமைத்துள்ளனர், உணவு, மருந்துகள் மற்றும் பிற தேவைகளை வழங்குகிறார்கள், அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களின் வசதிக்காக பொது கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

காலி முகத்திடலில் உள்ள ஆர்ப்பாட்ட பகுதிக்கு ‘கோட்டாகோகம’ என பெயர் மாற்றும் அட்டைப் பலகையால் ஆன பதாகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்....