‘சிம்மாசன உரை’ : கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன்

Date:

(சமகால அரசியல் களநிலவரம் தொடர்பில் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் முகப்புத்தகத்தில் பதிவிட்ட கவிதை தொகுப்பு)

சிம்மாசன உரை

சிங்கம் குகையிலிருந்து
நேற்று
வெளியே வந்தது

அதன் கண்களில்
ஒரு முயலின் தவிப்புத் தெரிந்தது

அசைவுகளில்
ஓர் ஆட்டுக் குட்டியின்
பயமிருந்தது

ஓநாய்க் குட்டிகளுக்கும்
சிறப்புத் தேவையுடைய நரிகளுக்கும்
சுரத்தற்ற குரலில்
அது உபன்னியாசம் வழங்கிற்று

அப்பாவிப் பிராணிகள்
அவதிப்படுவதையிட்டு
தளுதளுத்த குரலில்
கவலை வெளியிட்டது

அவற்றின் நலன் காக்குமாறு
ஓநாய்களிடமும்
நரிகளிடமும்
பரிந்துரை செய்தது

காடு பற்றி எரிவது பற்றியோ
பறவைகள்
அவலக் குரல் எழுப்பி
அலைமோதுவது பற்றியோ
எதுவும் சொல்லாமல்
யாரும் அறிநதிராத தனது குகைக்குள்
மீண்டும் புகுந்து கொண்டது

நேற்று நள்ளிரவில்
மற்றொரு காட்டுக்குத்
தீயிடப்பட்டது

வெக்கை பொறுக்க முடியாத
பிராணிகளதும் பறவைகளதும்
அவலக் குரல்
ஆகாயம் வரை ஒலித்தது…!

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...