‘சிம்மாசன உரை’ : கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன்

Date:

(சமகால அரசியல் களநிலவரம் தொடர்பில் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் முகப்புத்தகத்தில் பதிவிட்ட கவிதை தொகுப்பு)

சிம்மாசன உரை

சிங்கம் குகையிலிருந்து
நேற்று
வெளியே வந்தது

அதன் கண்களில்
ஒரு முயலின் தவிப்புத் தெரிந்தது

அசைவுகளில்
ஓர் ஆட்டுக் குட்டியின்
பயமிருந்தது

ஓநாய்க் குட்டிகளுக்கும்
சிறப்புத் தேவையுடைய நரிகளுக்கும்
சுரத்தற்ற குரலில்
அது உபன்னியாசம் வழங்கிற்று

அப்பாவிப் பிராணிகள்
அவதிப்படுவதையிட்டு
தளுதளுத்த குரலில்
கவலை வெளியிட்டது

அவற்றின் நலன் காக்குமாறு
ஓநாய்களிடமும்
நரிகளிடமும்
பரிந்துரை செய்தது

காடு பற்றி எரிவது பற்றியோ
பறவைகள்
அவலக் குரல் எழுப்பி
அலைமோதுவது பற்றியோ
எதுவும் சொல்லாமல்
யாரும் அறிநதிராத தனது குகைக்குள்
மீண்டும் புகுந்து கொண்டது

நேற்று நள்ளிரவில்
மற்றொரு காட்டுக்குத்
தீயிடப்பட்டது

வெக்கை பொறுக்க முடியாத
பிராணிகளதும் பறவைகளதும்
அவலக் குரல்
ஆகாயம் வரை ஒலித்தது…!

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...