பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க தாம் தொடர்ந்தும் பிரதி சபாநாயகராக செயற்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட அமர்விலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, தனது இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்க மறுத்து விட்டதாகவும், இந்த முக்கியமான நேரத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில், தன்னை பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தான் பதவியில் நீடிப்பதாகவும், பிரதி சபாநாயகர் பதவிக்கான எந்த சலுகைகளையும் பெறமாட்டேன் என்ற நிபந்தனையின் பேரில் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கும் அரசாங்கத்தின் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதற்கும் எடுத்த தீர்மானத்தை அடுத்து ஏப்ரல் 5 ஆம் திகதி ஜனாதிபதியிடம் தனது இராஜினாமாவை கையளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...