‘புதிய அமைச்சரவையில் அமைச்சுக்களை ஏற்க போவதில்லை ‘: பந்துல குணவர்த்தன

Date:

எதிர்வரும் சில நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும், அவர்களுக்கு இடமளிக்கும் வகையில், அமைச்சரவையின் பொறுப்பை ஏற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்திற்கு சுமார் 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க முன்வந்துள்ள அமைச்சர், நெருக்கடிக்கு தீர்வு கிடைத்தவுடன் மற்றுமொரு அமைச்சரவையை நியமிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும், குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பல மாற்றங்களையும்.பந்துல குணவர்தன தனது கடிதத்தில் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...