புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்!

Date:

புத்தாண்டு தினத்திலும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் பதிவாகியுள்ளன.

தேசிய புத்தாண்டு இன்று காலை 8.41 மணிக்கு உதயமாகிய போதிலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணி முதல் கொம்பனிதெருவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருந்தனர், ஆனால் புத்தாண்டு பிறக்கும் வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் போதியளவு பெற்றோல் இருப்பு வைத்திருப்பதாக உறுதியளித்த போதிலும், வரிசைகள் காணப்படுகின்றன.

இதற்கிடையில், 37,500 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 37,500 மெட்ரிக் தொன் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டிற்கு வரும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது.

கப்பல்கள் வந்தவுடன் எரிபொருள் விநியோகம் விரைவில் தொடங்கும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...