புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்!

Date:

புத்தாண்டு தினத்திலும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் பதிவாகியுள்ளன.

தேசிய புத்தாண்டு இன்று காலை 8.41 மணிக்கு உதயமாகிய போதிலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணி முதல் கொம்பனிதெருவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருந்தனர், ஆனால் புத்தாண்டு பிறக்கும் வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் போதியளவு பெற்றோல் இருப்பு வைத்திருப்பதாக உறுதியளித்த போதிலும், வரிசைகள் காணப்படுகின்றன.

இதற்கிடையில், 37,500 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 37,500 மெட்ரிக் தொன் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டிற்கு வரும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது.

கப்பல்கள் வந்தவுடன் எரிபொருள் விநியோகம் விரைவில் தொடங்கும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...