கல்வித்துறையில் பெரும் பங்காற்றிய போராசிரியர் சோ. சந்திரசேகரன் காலமானார்!

Date:

இலங்கையின் கல்வித்துறையில் பெரும் பங்காற்றிய போராசிரியர் சோ. சந்திரசேகரன் (77) காலமானார்.

மாரடைப்புக் காரணமாக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை ஊவா கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை பயின்ற அவர் பின்னர் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியில் உயர் கல்வியை தொடர்ந்தார்.

இதேவேளை 1963 ஆம் ஆண்டு பேராதனை மற்றும் ஜப்பான் ஹிரோசிமா பல்கலைக்கழகங்களில் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து கொழும்பு பல்கழைக்கழகத்தின் இணைப்பேராசிரியர், பேராதனை பல்கலைக்கழகத்தின் போதனா ஆசிரியர் இலங்கை மத்திய வங்கியின் மொழிப்பெயர்ப்பாளர் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் கடமையாற்றியுள்ளார்.

அதேபோன்று இலங்கையில் தமிழர் கல்வி புதிய நூற்றாண்டுக்கான கல்வி இலங்கை இந்தியர் வரலாறு போன்றவற்றுடன் மலையககல்வி அபிவிருத்தி தொடர்பான பல நூல்களையும் சந்திரசேகரன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல்...

சவூதி அரேபியாவில் பிறை (ஹிலால்) பார்த்தல்: மரபு – நீதித்துறை – அறிவியல் – தொழில்நுட்பம் என்பவற்றின் ஒருங்கிணைப்பு.

சவூதி அரேபியாவில் பிறை பார்த்தல் என்பது ஒரு தனிப்பட்ட மார்க்கச் செயல்முறை...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும்...