‘மக்களின் இந்த போராட்டம் பொய்யானது’: பௌத்த பிக்குகள் கொழும்பில் பேரணி

Date:

சிங்கள பௌத்த மக்கள் கருத்தின் மீது கைவைக்க வேண்டாம் என தெரிவித்து கொழும்பில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த பேரணியில் ‘மக்களின் இந்த போராட்டம் பொய்யானது, சிங்கள மக்களின் செல்வாக்கை தொடாதே போன்ற என்ற பதாதைகளை ஏந்தி பல பிக்குகளும், சமூக ஆர்வலர்கள் என கூறி சிலரும், நெலும் பொக்குன மண்டபத்தலிருந்து நடை பவணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

நடை பவணி எங்கு முடியும், எந்த திசை நோக்கி செல்லும் என்று இதுவரை தெரியப்படுத்தவில்லை.
மகா சங்கத்தினர், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த பேரணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...