புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிக்கை இன்று இரவு தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் படி, புதிளய அமைச்சரவையின் பின் அவர்கள் மத்தியில் உரையாற்றிய அறிக்கை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்களிலும் இரவு 07.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
புதிய அமைச்சரவையை நியமித்த போதிலும், நான்கு அரசாங்க உயர் பதவிகள் மாறாமல் இருக்கும் எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இருந்த அமைச்சுக்கள் மாற்றமில்லாமல் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக தனது கடமைகளை தொடர்வார் எனவும் . ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நீடிப்பார், அலி சப்ரி நிதி அமைச்சராக நீடிப்பார் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு சுட்டிக்கட்டியுள்ளது.