‘அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவு!

Date:

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சமகி ஜன பலவேகய குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் பதவி நீக்கப் பிரேரணை தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

இதேவேளை” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். கட்சி மட்டத்தில் இடம்பெறும் கலந்துரையாடிலின் பின்னர் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...