‘அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவு!

Date:

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சமகி ஜன பலவேகய குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் பதவி நீக்கப் பிரேரணை தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

இதேவேளை” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். கட்சி மட்டத்தில் இடம்பெறும் கலந்துரையாடிலின் பின்னர் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...