‘அரச அதிகாரிகள் மக்களது உணர்வுகளை மதித்து செயற்படவேண்டும்’ :ஜம்இய்யத்துல் உலமா சபை

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், கவலையையும் தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2022.04.19 ஆம் திகதி ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சகோதரர் கே.டி. சமிந்த லக்ஷான் குடும்பத்தினருக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஆறுதலையும், ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு, குறித்த சம்பவத்தின்போது காயமடைந்த ஏனையவர்களும் மிக விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றது.

அத்துடன், அனைத்து விதமான வன்முறைகளையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையானதொரு விசாரணை நடாத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றது.

அனைத்து தரப்பினரும் வன்முறையைத் தவிர்த்து ஜனநாயக ரீதியில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், குறிப்பாக அதிகாரிகள் மக்களது உணர்வுகளை மதித்து அவர்களின் வேண்டுகோள்களை செவிமடுத்து உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக நம்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதோடு, அதன் விளைவாக மக்கள் தமது தேவைகளையும், ஆதங்கங்களையும் முன்வைத்து ஜனநாயக ரீதியில் பல ஆர்ப்பாட்டங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் விரைவில் நீங்கி ஒரு சுமுகமான நிலைமை நம் நாட்டில் உருவாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...