அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வார்: நிதி அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றுவார்!

Date:

கடந்த திங்கட்கிழமை (5) நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, நிதியமைச்சர் என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

நிதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை (6) இராஜினாமா செய்த போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே அலி சப்ரி நிதி அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றுவார். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கைக்கான உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பான உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புகளில் கலந்துகொள்வதற்காக இந்த வாரம் பயணிக்கவிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பு திங்கட்கிழமை (11) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அலி சப்ரி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

“казино Slottica Официален Сайт

Slottica Casino 200% До 100 + 25 Бонус Завъртания"ContentБиблиотека...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...