அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வார்: நிதி அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றுவார்!

Date:

கடந்த திங்கட்கிழமை (5) நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, நிதியமைச்சர் என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

நிதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை (6) இராஜினாமா செய்த போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே அலி சப்ரி நிதி அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றுவார். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கைக்கான உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பான உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புகளில் கலந்துகொள்வதற்காக இந்த வாரம் பயணிக்கவிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பு திங்கட்கிழமை (11) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அலி சப்ரி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...