”இந்த ஆண்டு வெளிநாட்டுக் கடனாக 6 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது” : நிதி அமைச்சர் அலி சப்ரி

Date:

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கு நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு 15-20 நாட்கள் ஆகலாம் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமான ப்ளூம்பேர்க் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, எங்களுக்கு கடன் வழங்கிய சில நிறுவனங்கள் எங்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சந்தித்து விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பன எமது கலந்துரையாடலின் பிரதான தலைப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு அவசர உதவியாக 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் என இலங்கை நம்புகிறது.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நாங்கள் ஏற்கனவே பயனுள்ள விவாதங்களை நடத்தியுள்ளோம்.
பல அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. மற்ற நாடுகளில் உள்ள சக ஊழியர்களுடன் விவாதிக்க நாங்கள் காத்திருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ‘சீனப் பணத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு உதவுவதற்காக நாங்கள் சீன நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 6 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும்’ என்று நிதியமைச்சர் அலி சப்ரி குறித்த தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...