இன்றும் நாளையும் 4 மணிநேர மின்வெட்டு!

Date:

இன்றும் (11) நாளையும் (12) 4 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, காலை 8.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ABCD வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் 10.45 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 7.15 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். இருப்பினும் DEF வலயங்களுக்கு இன்று காலை 10.45 முதல் மதியம் 1 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

GHI வலயங்களுக்கு மதியம் 1 மணி முதல் 3.15 மணி வரையிலும், JKL வலயங்களுக்கு 3.15 முதல் 5.30 மணி வரையிலும், EFGH வலயங்களுக்கு இரவு 7.15 முதல் 9 மணி வரையிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும், IGKL வலயங்களில் இரவு 9 மணி முதல் 10.45 மணி வரை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...