இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!

Date:

இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே இலங்கையுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இலங்கையின் சமீபத்திய முடிவு குறித்து இந்திய அரசாங்கம் கவலை தெரிவித்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா ஏற்கனவே 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளதுடன் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருளையும் வழங்கியுள்ளது.

சீனாவை விட இலங்கைக்கு கடன் வழங்குவதில் முன்னணியில் இருக்க இந்திய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...