இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!

Date:

இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே இலங்கையுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய இலங்கையின் சமீபத்திய முடிவு குறித்து இந்திய அரசாங்கம் கவலை தெரிவித்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா ஏற்கனவே 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளதுடன் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருளையும் வழங்கியுள்ளது.

சீனாவை விட இலங்கைக்கு கடன் வழங்குவதில் முன்னணியில் இருக்க இந்திய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...