இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்: சமூக ஊடகத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு நாமல் வலியுறுத்தல்!

Date:

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பலர் பதிவிட்டுள்ளனர். எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, குரல்தர வல்ல அதிகாரிகளோ உத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையை அடுத்து சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

‘சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். ஏPN இன் கிடைக்கும் தன்மை, நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே, அத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகிறது.

அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்’ என நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கேள்வி கேட்கும் சமூகத் தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘சமூக ஊடகங்களுக்கு முன்னர் இருந்த புரட்சிகள் மற்றும் தற்போதைய சமூக ஊடகத் தடையால் உங்கள் மீதும் உங்கள் அரசாங்கத்தின் மீதும் கோபம் மற்றும் வெறுப்பு அலைகளைத் தடுக்க எதுவும் செய்யாது. பேச்சு சுதந்திரத்தால் அச்சுறுத்தப்பட்டால், நீங்கள் தலைமை தாங்க தகுதியற்றவர்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...