பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை முழுவதும் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை நம்பமுடியாத கடுமையான காலகட்டத்தை அனுபவித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தொற்றுநோயால் பொருளாதார தவறுகள் அதிகரித்துள்ளன, இதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘நியூசிலாந்திற்கான வெளியுறவுக் கொள்கை தாக்கங்களைப் பொறுத்தவரை, அமைச்சகத்திடம் இருந்து வரும் 24 மணிநேரத்தில் கூடுதல் விளக்கத்தை நான் பெற விரும்புகிறேன்’ என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
பொது நிதியை முறைகேடாக நிர்வகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவத்தை மாற்றுமாறு இந்த போராட்டங்கள் மூலம் கோரப்படுகின்றன.
அதேநேரம், இலங்கைத் தலைமையின் நடவடிக்கைகளை நியூசிலாந்து அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்று கோரி மனுவில் நியூசிலாந்து இலங்கையர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் நனாயா மஹுதாவும் குறிப்பிடுகையில்,
‘நியூசிலாந்து ஜனநாயக விழுமியங்களையும் நிறுவனங்களையும் வலுவாக நிலைநிறுத்துகிறது, பேச்சு சுதந்திரம் மற்றும் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உட்பட.
இலங்கை பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமையை நியூசிலாந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் – அமைதியான தீர்வுக்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இலங்கை வாழ் புலம்பெயர்ந்த மக்களும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். இதன மூலம் உலகெங்கிலும் இலங்கை விவகாரம் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.